உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு

பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி அவரது மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள சியல்கோட் வர்த்தக சமூகம் சேகரிக்கப்பட்ட 100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட போது பணிபுரிந்த ராஜ்கோ நிறுவனத்தில் இருந்து பிரிந்த குமாரவின் மாதாந்த சம்பளமான, 2000 அமெரிக்க டொலர்களையும் அவரது மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரியந்த குமாரவின் மனைவிக்கு 10 வருடங்களுக்கு இவ்வாறு சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மன்னாரில் விஷேட சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைத்த அமைச்சர்

wpengine

கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் முகநூல் பயன்படுத்தக் கூடாது

wpengine

கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட ஹிஸ்புல்லாஹ்

wpengine