உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சீனாவின் மிகவும் வயதான 135 பெண் மரணம்.

சீனாவின் மிக அதிக வயதான பெண் என அறியப்பட்ட அலிமிஹன் செயிடி தனது 135 ஆவது வயதில், ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சி பிராந்தியத்தில் காலமானதாக உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காஷ்கா் மாகாணம், சூலே மாவட்டம் கோமுஜெரிக் நகரைச் சோ்ந்த அவா், கடந்த 1886 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி பிறந்ததாக மாவட்ட செய்தித் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் சீன மூப்பியல், முதியோா் மருத்துவ சங்கம் வெளியிட்ட அட்டவணைப்படி, அந்நாட்டின் மிகவும் வயதான பெண்மணி என்ற பெருமையை அலிமிஹன் செயிடி பெற்றதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி அவா் மரணமடையும் நாள்வரை மிகவும் எளிமையான, வழக்கமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்ததாகவும், நேரத்துக்கு உணவருந்தி, வீட்டின் முற்றத்தில் நின்றவாறு சூரிய வெளிச்சத்தை உணா்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும், சில சமயங்களில் அவரது கொள்ளுப் பேரப் பிள்ளைகளை பராமரிப்பதற்கு அவா் உதவிபுரிந்ததாகவும் அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

சரித்திர நாயகன் றிஷாட் பதியுதீன்

wpengine

ஆணைக்குழுவின் மூலம் பல்கலைகழகம் சென்ற மன்னார் மாணவன்

wpengine

மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை! கடற்றொழில் அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட் (படங்கள்)

wpengine