பிரதான செய்திகள்

சஹ்ரானுடன் தொடர்பு! புத்தளம் மத்ராஸாவில் இருவர் கைது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் புத்தளத்தில்  உரையாற்றியதாக கூறப்படும் மதராஸா பாடசாலையில் பணியாற்றிய இருவர் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் இந்த மதராஸா பாடசாலைக்குச் சென்று அங்கிருந்த மாணவர்களிடையே உரையாற்றியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே, 
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

26,27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

முஸ்லிம் குடியேற்றம் வில்பத்து மீதான அமைச்சர் றிஷாட்டின் வழக்கு பெப்ரவரி

wpengine

“இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிகளோ அல்லது எந்த வாகனங்களோ கிடைக்காது.

Maash

பாடசாலை ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு அரசு நடவடிக்கை

wpengine