பிரதான செய்திகள்

ஆளும் கட்சி இராஜங்க அமைச்சர் மீது றிஷாட் வழக்கு தாக்கல்

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜயந்த சமரவீர வெளியிட்ட கருத்தால் தமக்கு சிரமங்களும் கடும் அசௌகரியங்களும் ஏற்பட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனக்கு ஒரு பில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு களுத்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜயந்த சமரவீர, ஏப்ரல் 21 தாக்குதலுடன் தான் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ரணில்,மைத்திரி ஆட்சியில் மீண்டும் விலை அதிகரிக்கும் நிலைமை

wpengine

கூகுள் கோட் இன் – 2019 இந்துக் கல்லூரி மாணவன் முதலாமிடம்

wpengine

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு – பதின்மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய நவீன பற்சிகிச்சை கதிரை

wpengine