பிரதான செய்திகள்

அரச நிறுவனங்களின் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பம்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இந்த வார இறுதி வரை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த காலப்பகுதியில் மக்கள் செயற்படும் முறை தொடர்பில் ஆராயந்து நிறுவன மட்டத்தில் எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், களுத்துறை மற்றும் புத்தளம் உட்பட 23 மாவட்டங்களுக்கு நேற்று தளர்த்தப்பட்டுள்ளது.


ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திரும்பும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் இந்த வார இறுதி வரை மேற்கொள்வதற்கு பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த காலப்பகுதியில் மக்களின் செயற்பாடு தொடர்பில் ஆராய்ந்து பார்த்து நிறுவன மட்டத்தில் எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கடந்த அரசாங்கங்கள்மீது பழிபோட்டு குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசாங்கம்..!

Maash

மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் துணிந்து குரல் கொடுத்த றிப்கான் பதியுதீன் (விடியோ)

wpengine

மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்டனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine