பிரதான செய்திகள்

நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மீண்டும்.

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


விடுமுறை பெற்றுள்ள முப்படையினர் முகாம்களுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்தது.


எனினும் இந்த நடவடிக்கை காரணமாக நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

77 ஆவது சுதந்திரதின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!!!

Maash

இனவாதத்தை ஒழிக்க! றிஷாட்டின் கரத்தை பலப்படுத்த அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

wpengine

”ருத்ரதாண்டவமாடும் நிறை வேற்றதிகாரம்”

wpengine