பிரதான செய்திகள்

கொரோனா நோயாளியின் மனைவிக்கும் கொரோனா தொற்று

புத்தளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


மாரவில, நாத்தன்டிய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளியின் மனைவிக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி சென்னை நோக்கி சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள் அவர் இலங்கை வந்துள்ளார். இந்த நபர் சுய தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.


சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்துக் கொண்டு வந்தவர், மாரவில பிரதேசத்தில் 100 வீடுகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார்.


அதற்கமைய அந்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து அவர் வசிக்கும் பிரதேசத்தில் 10 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

தலைமன்னார்,முசலி,மடு போன்ற பிரதேசங்களை சுற்றுலாத்துறை மேம்படுத்த அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மஹிந்த அமரவீர தெரிவு

wpengine

ஹக்கீம்-ஹசன் அலி முறுகல் மீண்டும் சமரச முயற்சி

wpengine