பிரதான செய்திகள்

வங்கி அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவசியமான இடங்களில் ஊரடங்கு வேளையிலும் வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.


இது தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து வணிக வங்கிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.


அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக சுழற்சி முறையில் 60-72 மணித்தியால இடைவெளியில் 8 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லாட்சியில் உல்லாசமாக வாழும் முன்னால் அமைச்சர்கள்

wpengine

பயங்கரவாதம் அல்லது குண்டுத் தாக்குதலுடன் றியாஜ்க்கு தொடர்பில்லை

wpengine

இரா சம்பந்தனை ஏமாற்றிய ரவூப் ஹக்கீம்

wpengine