பிரதான செய்திகள்

மன்னார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்கள் நியமனம்

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கான கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு நேற்று (27) மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவராக முத்து சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

வசீம் தாஜூடீன் கொலை! சிக்கப்போகும் ஷிராந்தி

wpengine

பாடகர் இராஜ் விக்கிரமரத்னவின் கோரிக்கை ஒன்று! அமைச்சர் றிசாட் ஒரு இலட்சம் வேலை திட்டம்

wpengine

வில்பத்து முஸ்லிம் சட்டவிரோத குடியேற்றம்! பின்னனியில் அமைச்சர் றிஷாட்

wpengine