பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சிக்குள்! பிரதமர் பதவி மோகம்

பிரதமர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சிக்குள் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், மக்கள் தெரிவு செய்யும் நபரையே பிரதமராக நியமிப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

பலமான நபர் ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பிரதமராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் சஜித் தரப்பிற்கும், ரணில் தரப்பிற்கும் இடையில் முரண்பாடான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

மர்ம நோயால் வயோதிப தோற்றம்கொண்ட சிறுவன்

wpengine

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானம்!

Editor

ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த பிக்குகளின் பலத்தை நிரூபித்து இருக்கின்றோம்.

wpengine