பிரதான செய்திகள்

ரணிலின் அதிரடி தீர்மானம்! பதவி விலகல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவி மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால், அவருக்கு தேவையான முறையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கும், கட்சியின் நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால் அவருக்கு முழுமையான அதிகாரம் வழங்கிவிட்டு, தான் ஓய்வில் தனது நாட்களை கழிப்பதற்கு தீர்மானித்ததாக பிரதமர் தெரிவித்தார் என கூறப்படுகின்றது.

இதேவேளை மஹிந்த தரப்பில் கருத்து வெளியிட்ட முக்கியஸ்தர் ஒருவர், ரணில் விக்ரமசிங்க தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பினை இல்லாமல் செய்வதற்காக சஜித் தரப்பினர் இவ்வாறு போலியான செய்தி வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடக்கின் காணிப் பிரச்சினை குறித்து ஆராய 5 மாவட்ட அரச அதிபர்களுக்கும் அழைப்பு!

wpengine

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் தேர்தல் இல்லை

wpengine

ரணிலின் வாக்குமூலத்தை அரசியலுக்கு பயன்படுத்தாமல் சட்டநடவடிக்கை எடுக்கவும்.- பாட்டலி சம்பிக்க ரணவக்க.

Maash