பிரதான செய்திகள்

இனவாதம், மதவாதம் இல்லாத கௌரவமான ஓர் தலைவர் என்றால் அது ரணில் விக்ரமசிங்க மட்டும் தான்

முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார்.


இனவாதம், மதவாதம் இல்லாத கௌரவமான ஓர் தலைவர் என்றால் அது ரணில் விக்ரமசிங்க மட்டும் தான் என்பதே முஸ்லிம் மக்களின் நம்பிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் தேர்தல் ஒன்றில் முஸ்லிம் மக்களின் அதிகளவான மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றிற்கு தெரிவான பௌசீ தற்பொழுது ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேசத்தின் உதவியுடன் சாதிக்க துடிக்கும் தமிழர்கள்.

wpengine

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maash

விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் – நாமல் ராஜபக்ஷ

wpengine