பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் சில சிங்களவாதிகள் அழுத்தம்

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தென்னிலங்கை மக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

இவ்வாறான நிலையில் தென்னிலங்கையின் பல பிரதேசங்களில் ரிசாத்துக்கு எதிராக மக்கள் பாரியளவிலான பதாதைகள் வைத்துள்ளனர்.

ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதராவாக வாக்களிக்காமல் மீண்டும் ஊருக்கு வர வேண்டாம் என அந்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “26 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில்” ஜனாதிபதி.

Maash

ரணிலும் ஹக்கீமும், பதவியையும் தலைமைத்துவத்தையும் இருவரும் விட்டுச் செல்லமாட்டார்கள்!

wpengine

தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்களை சந்திக்க உள்ள மஹிந்த

wpengine