பிரதான செய்திகள்

மன்னாரில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன விடுதலை புலிகளின் ஆயுதங்களா? சந்தேகம்

மன்னார், சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள பற்றைக்குள் மர்மமான இரண்டு பொதிகளை அவதானித்த நபர் ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதிகளை பார்வையிட்டதோடு, சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வெடிப்பொருட்கள் படையினரினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

Related posts

முஸ்லிம்கள் என்றால் எவ்வளவு அடித்தாலும் ஐ.தே.கட்சி தான் என்ற நிலையை மாற்ற வேண்டும்

wpengine

எரிபொருட்களை பதுக்கி வைக்கும் செயற்பாடுகளை நிறுத்தி, அரசாங்கத்திற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை.

Maash

ரணிலுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை! காதர் மஸ்தான் (பா.உ) கையொப்பம்

wpengine