பிரதான செய்திகள்

கொழும்பு – கொச்சிக்கடையில் மீண்டும் குண்டுவெடிப்பு

கொழும்பு – கொச்சிக்கடையை அண்டிய பகுதியில் பாதுகாப்பு படையினரால் பாரிய குண்டு வெடிப்பொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
வெடி குண்டு காணப்படுவதாக தெரிவித்து அப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை சற்று முன் மேற்கொள்ளப்பட்டது.

வாகனமொன்றிலிருந்து மீட்கப்பட்ட குறித்த
வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயற்சித்த போதே பாரிய சத்தம் கேட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

இலங்கையில் நேற்றைய தினம் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருந்தது.

Related posts

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க மன்னாரில் கறுப்புப்பட்டி போராட்டம்

wpengine

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி விரைவில்! அம்பலப்படுத்தப்பட உள்ள ஜனாதிபதி.

Maash

IIFAS அமைப்பின் மார்க்க கருத்தரங்கும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

wpengine