பிரதான செய்திகள்

மன்னாரில் வெண்பா பணி மூட்டம்! பலருக்கு அசௌகரியம்

மன்னார் பெரு நிலப்பரப்பில் என்றும் இல்லாதவாறு ‘வெண்பா’ பனி என அழைக்கப்படும் பனி படலம் கடந்த சில வாரங்களுக்கு மேலாக அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால் கடற்தொழிலுக்கும் மற்றும் அலுவலகம் , பாடசாலைக்கு செல்பவர்கள் குறித்த வெண்பா பனி படலத்தினாலும், அதீத குளிர் காரணமாகவும் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முழுமையாக காணப்படுகின்ற போதிலும்,மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார்-யாழ் பிரதான வீதி,மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மற்றும் மன்னார்-நானாட்டான் பிரதான வீதி போன்ற பகுதிகளில் குறித்த பணிப்பொழிவு அதிகரித்து காணப்படுகின்றது.

காலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை குறித்த பணிப்பொழிவு அதிகரித்து காணப்படுகின்மையினால் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கூட்டமைப்பு, மஸ்தான் எம்.பி மீண்டும் அடம்பிடிப்பு: ஆதரிக்க முடியாதென அமைச்சர் றிசாத்

wpengine

மதவழிபாட்டு தலங்களைப் பயன்படுத்த முடியாது

wpengine

வன்னி,யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பெயர் விபரம்

wpengine