பிரதான செய்திகள்

நாளை புதிய அமைச்சரவை கூடட்டம்

புத்தாண்டில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்றப் பின்னர், கடந்த 20 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதுடன் அது 20 நிமிடங்களுக்குள் முடிவடைந்தது.
அந்த நேரத்தில் அமைச்சர்களுக்கான துறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கும் இடையில் துறைகள் சம்பந்தமான இழுபறி நிலை காணப்படும் சூழலில் நாளைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விலையின்றிப் போன பேரம் பேசல் சந்தை; தமிழ், முஸ்லிம் முதலீடுகள் காப்பாற்றப்படுமா?

wpengine

‘கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்’

wpengine

அதாவுல்லா என்ற கடும்போக்கு முஸ்லிம் இனவாதி நாடாளுமன்ற பிரதிநிதியாக வரக்கூடிய சந்தர்ப்பம்

wpengine