பிரதான செய்திகள்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகம் நீரில் முழ்கியுள்ளது

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகம் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஆவணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன் இரணைமடு குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் கனகராயன் ஆற்றுப்படுக்கை அண்டிய கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில் நேற்று பிற்பகல 1.00 மணியளவில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குள் வெள்ளநீர் புகுந்து கொண்டதால் அங்கிருந்த உத்தியோகத்தர்களும், ஒரு சில ஆவணங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றும் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பிரதேச செயலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

புத்தளம் மாவட்ட வைத்தியசாலை பிரச்சினைக்கு ராஜிதவுடன் சேர்ந்து அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

அதாவுல்லா என்ற கடும்போக்கு முஸ்லிம் இனவாதி நாடாளுமன்ற பிரதிநிதியாக வரக்கூடிய சந்தர்ப்பம்

wpengine

ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களை ஏமாற்றி தம் வயிற்றுப் பிழைப்பை நடத்த வேண்டாம்

wpengine