பிரதான செய்திகள்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை ஏன் மைத்திரி எடுத்தார்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

ஜனாதிபதியை கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சிகள் தொடர்பில் விசாரணைகள் தற்போதும் இடம்பெற்று வருகிறது.

இதுதொடர்பான விசாரணை நிறைவடையும் வரை, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.

அதற்கமைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

S.P.மஜித்தின் சுரங்க பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிர போராட்டம்

wpengine

கூட்டமைப்புக்குள் தொடர் குழப்பங்கள்

wpengine

கொடுர யுத்தம் பொருளாதாரத்தை நாசமாக்கியது! இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைத்தது அமைச்சர் றிஷாட்

wpengine