பிரதான செய்திகள்

சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது எனவும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஒருவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயற்பட்டால், அவர் அந்த பதவியில் இருக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

அவர் தானாக விலக வேண்டும் அல்லது குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி 15 நாள்

wpengine

அமைச்சர் றிஷாட் இனவாதியா? சிங்கள மக்கள் ஆச்சரியம்

wpengine

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கத்தால் பிரதமர் மோடிக்கு மகஜர் கையளிப்பு!

Editor