பிரதான செய்திகள்

நாய்கள் சண்டையிடுவது போல் முசலி பிரதேச சபை உறுப்பினர்களின் நிலை.

– முகுசீன் றயீசுத்தீன் –

முசலி மக்களில் ஒரு பகுதியினர் மீள்குடியேறியுள்ள போதிலும் இன்னும் அவர்கள் அமைதியான வாழ்க்கைச் சூழலுக்குத் திரும்பவில்லை.

மக்களின் அறியாமை, வறுமை, அரசியல் வெறித்தனம் என்பன இத்தகைய துன்பியல் நிலைக்கு முக்கிய காரணங்களாகும்.

தொழில் முயற்சி, பிள்ளைகளின் கல்வி, மார்க்க செயற்பாடுகள், பண்பாடான நடத்தை, உறவுகளைப் பேணல், பிரயோசமான பொழுது போக்குகள், பிறர் நலன் பேணல் போன்றவற்றில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.

அவ்வப்போது சில வீடுகள், சில வாழ்வாதாரப் பொருட்கள் வரும். தேவையுடையோரின் எண்ணிக்கை அதிகமிருக்கும். அவை முறைப்படி வழங்கப்படவும் மாட்டா. முட்டிமோதி, அடிபிடிப்பட்டு, அவமானம் பெற்று, அலைக்கழிக்கப்பட்டு சிலருக்குக் கிடைக்கப்பெறும்.

இவ்வாறே எப்போதாவது கொஞ்சம் தெருவிளக்குகள் வரும். பல கிராமங்களில் தேவையுடைய பல இடங்கள் இருக்கும். மறுபடி என்ன!

சில முட்களுக்காக இறைச்சிக்கடையில் நாய்கள் சண்டையிடுவது போல் பிரதேச சபை உறுப்பினர்களின் நிலை.

Related posts

மத்துகம பொது சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக்கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை

wpengine

“பிக் பாஸ்” நிகழ்ச்சி ப்ளுவேல்லாக மாறும் நிலை

wpengine

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு நான்கு நாடுகள் சம்மதம்-அமைச்சர் அலி சப்ரி

wpengine