பிரதான செய்திகள்

வவுனியா போக்குவரத்துக்கு இடையூர் மக்கள் குற்றம்

வவுனியா நகர்ப்பகுதியில் வீதியோரங்களில் நிறுத்தி வைத்து வாகனங்கள் திருத்தம் செய்யப்பட்டு வருவதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வவுனியா நகரசபை தலைவருக்கு பல தடவைகள் தெரியப்படுத்திய போதிலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன் இது வரை இதற்கான தீர்வை பெற்றுத்தரவில்லை என பயணிகள் இதன் போது குற்றம்சாட்டியுள்ளார்கள்.

வவுனியா நகர்ப்பகுதியில் பாதசாரி கடவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் வீதியின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தி திருத்தப் பணிகள் செய்யப்படுவதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதென குற்றம் சாட்டும் பயணிகள் இது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

புகையிரத நிலைய வீதி, வைரவ கோவில் வீதி, யாழ் வீதி, இறம்பைக்குளம் மயான வீதி, உட்பட பல வீதிகளில் காணப்படும் குறித்த இடக்கள் வாகனங்கள் நிறுத்தவதற்கு ஏற்ற வசதிகள் இன்றி வீதியோரங்களில் நிறுத்தி திருத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

Editor

மஹிந்தவை சந்தித்த சீனா தூதுவர்! இரகசியம் வெளிவரவில்லை

wpengine

பண்டாரவெளி காணி விடயத்தில் வெள்ளிமலை மக்களை மாவட்ட செயலகத்தில் கேவலமாக பேசிய கேதீஸ்வரன்! கிராம மக்கள் விசனம்

wpengine