பிரதான செய்திகள்

மஹிந்த பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு

தேசிய பாதுகாப்பு, பொருளாதார நெருக்கடி, பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தகவலை பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று மாலை 5.30 மணிக்கு மஹிந்தவின் இல்லத்தில் பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு சமகால அரசியல் நிலை சம்பந்தமாக அலசி ஆராயவுள்ளனர்.

குறிப்பாக வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதன் மூலம் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவது குறித்தும், இதற்காக மைத்திரி அணியின் ஆதரவைப் பெறுவது தொடர்பிலும் இதன் போது திட்டம் வகுக்கப்படலாம் என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டு அதன் மீது டிசம்பர் 8ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் மோசடி; ரஷ்யா மீது விசாரணை செய்ய ஒபாமா உத்தரவு

wpengine

தெற்கில் சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழ! தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க வேண்டும்.

wpengine

மன்னார் அரிப்பு பகுதியில் கடற்படையினரை தாக்கியதாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்களை புகைப்படம் எடுத்தமைக்கு சிறைச்சாலை பணிப்பாளரிடம் மன்னார் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

wpengine