பிரதான செய்திகள்

3குழந்தை பெற்ற பெற்றோரின் அவசர கோரிக்கை

ஹொரனை வைத்தியசாலை வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

குருந்துவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான நாலிக்கா பிரியதர்ஷனி என்பவரே 3 பிள்ளைகளை பெற்றுள்ளார். குழந்தை மற்றும் தாய் தற்போது ஆரோக்கியமான நிலையில் உள்ளனர்.

பிறந்த குழந்தைகள் 2.150, 1.900, 1.685 கிலோ கிராம் எடை கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த குழந்தைகளை வளர்ப்பதில் இளம் தம்பதியினர் பெரும் சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குழந்தைகளின் தந்தைக்கு நிரந்தர தொழில் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தம்பதியருக்கு 4 வயதில் ஒரு பெண் குந்தை உள்ள நிலையில், தற்போது 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

பெரிய வருமானம் இன்றி இந்த குழந்தைகளை வளர்ப்பது எப்படி என தெரியவில்லை. விரும்புவோர் தங்களுக்கு உதவுமாறு குழந்தைகளின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

இனவாதக் கட்சிகளின் தலைவர்களும் ,வங்குரோத்து அரசியல்வாதிகளும் தற்போது எந்த வேட்பாளருடன் கைகோர்த்துள்ளார்கள்.

wpengine

சாணக்கியனை கொஞ்சைப்படுத்திய இனவாதி திலீபனினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

wpengine

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துல்ஸான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

wpengine