பிரதான செய்திகள்

வவுனியா புகையிரத்துடன் மோதி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் சிறிய கார் ஒன்று, பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் ஒருவரும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

CSN தொலைக்காட்சி நிதி மோசடி! யோஷிதவுக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு

wpengine

‘அக்சஸ் யு.கே.’ இணையம் ஊடாக பிரிட்டன் விசா

wpengine

மீண்டும் “அல்லாஹ்வை” அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர். (வீடியோ)

wpengine