பிரதான செய்திகள்

30வருடத்தின் பின்பு முஸ்லிம் அரசாங்க அதிபர் வவுனியாவில் பதவியேற்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை (06.07) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமை தாங்கினார்.

இலங்கை நிருவாக சேவை முதலாம் தரத்திலுள்ள ஐ.எம். ஹனீபா, இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் அரசாங்கத அதிபராவார்.

30 வருடங்களுக்குப் பின்னர் பதவியேற்கும் முஸ்லிம் அரசாங்க அதிபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரில் 2,000 கடலட்டைகள் உயிருடன் மீட்பு!

Editor

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது!

Maash

அரச அதிகாரிகள் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டும்- இரா.சாணக்கியன்

wpengine