பிரதான செய்திகள்

வவுனியா,மன்னாரில் குரங்கின் தொல்லை

வவுனியாவில் பல பகுதிகளில் குரங்கு மற்றும் மர அணிலின் தொல்லைகள் அதிகளவில் காணப்படுகின்றது.

இதனால் வீட்டிலுள்ள கோழிகள் உட்பட ஜீவனோபாயம் அனைத்திற்கும் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த தென்னை பயிர்ச் செய்கை அலுவலகத்தினால் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்படுகின்றன.

வவுனியாவில் தேங்காய், மாங்காய் போன்றவற்றிற்கு குரங்குகள் பெரும் சேதம் எற்படுத்தி அழிவை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் குரங்கின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிகள் வழங்கும் நடவடிக்கையினை வவுனியா, மன்னார் பிராந்திய தென்னை பயிர்ச் செய்கை அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

துப்பாக்கி பெற்றுக்கொள்பவர்களுக்கு பயிற்சிகளும் அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

Related posts

வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று தீ

wpengine

ரணில்,மைத்திரி மோதல்! ராஜதந்திர தலையீடு

wpengine

வறட்சி நிவாரணம்! மக்களை வேலை வாங்கும் கிராம அதிகாரிகள்

wpengine