பிரதான செய்திகள்

நிதி ஒதுக்கீட்டுக்கான உபகரணங்களை வழங்கி வைத்த முன்னால் மாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மாதர் சங்களுக்கான சமையல் உபகரணங்கள்,தளபாடங்களையும் இன்று காலை முசலி பிரதேச செயலகத்தில் வைத்து வட மாகாண சபையின் முன்னால் உறுப்பினரும்,கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சரின் பிரத்தியோக செயலாளருமான றிப்ஹான் பதியுதீன் வழங்கி வைத்தார்.

இதற்கான நிதியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனும்,வட மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் றிப்ஹான் பதியுதீனுடைய நிதியிலும் இதற்கான உபகரணங்களை  முசலி,அளக்கட்டு, பிச்சைவாணிபங் நெடுங்குளம்,பெற்கேணி ஆகிய பள்ளிவாசல்களுக்கு சாப்பாட்டு சமையல் உபகரணங்களையும் அத்துடன் வேப்பங்குளம் மாதர் சங்கத்திற்கு தளபாட உபகரணங்களையும் வழங்கி வைத்தார்கள்.

இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் முஜாஹிர் மற்றும் முசலி பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆன பைருஸ்,சுபியான்,பாயிஸ் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகம் என  ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.

Related posts

சேதங்கள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

wpengine

பாராளுமன்ற உறுப்பினருக்கு இன்று 19தடுப்பூசி

wpengine

ஒன்றுகூடஉள்ள 4 முன்னாள் ஜனாதிபதிகள் ..!

Maash