உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்லாத்திற்கு மாறிய ஷப்னம் பேகத்திற்கு நடைபெற்ற சோகம்

மகாமங்கலேஷ்வர் மா பவானி என்ற திருநங்கை கின்னர் அகதா என்ற ஆன்மிக இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

மனித நேயத்தை பரப்பும் கொள்கை கொண்ட இந்த இயக்கத்தில் திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளார்கள்.

சிறுவயதிலிருந்து சமூகத்தில் பல்வேறு சவால்கள் மற்றும் இன்னல்களை சந்தித்தே இன்று தன்னம்பிக்கை மனிதராக பவானி வலம் வருகிறார்.

அவர் கூறுகையில், நான் பிறப்பதற்கு முன்னரே உத்தரபிரதேசத்திலிருந்து டெல்லிக்கு என் குடும்பம் குடிபெயர்ந்தது.

என் பெற்றோருக்கு என்னுடன் சேர்த்து மொத்தம் எட்டு பிள்ளைகள் உள்ளார்கள்.

மிகவும் வறுமையான குடும்பம் என்பதால் உணவுக்கே மிகவும் சிரமப்பட்டோம்.

எனக்கு பத்து வயதாக இருக்கும் போது நான் திருநங்கை என்பதை எனது உடல் உணர்த்தியது. என் அழகு காரணமாக என்னை பலர் தவறாக அணுகினார்கள். என் அழகே எனக்கு பிரச்சனையாகி போனதால் வீட்டை விட்டு 13 வயதில் வெளியேறினேன், பள்ளியிலும் இது போன்ற பிரச்சனை இருந்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தினேன்.

பின்னர் திருநங்கைகளுக்கான சமூகத்தில் இணைந்து செயல்பட தொடங்கினேன் என கூறியுள்ளார்.
பவானி சில காலம் இஸ்லாமியத்துக்கு மாறி ஷப்னம் பேகம் என பெயரை மாற்றி கொண்டார், ஹஜ் பயணத்துக்கு கூட சென்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு இந்துவாக மாறி ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Related posts

‘தேவையான நெல் கையிருப்பில் இருப்பதாக அரசு தெரிவிப்பது பொய்’

Editor

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

மத்திய மாகாண பட்டதாரிகளே! இது உங்களின் கவனத்திற்கு

wpengine