பிரதான செய்திகள்

மன்னார் மடுவில் மரகடத்தல் வியாபாரம்

மன்னார் மடு வனப் பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத மரவிற்பனை நிலையம் ஒன்று காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் இன்று அதிகாலையில் காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

முற்றுகையிடப்பட்டுள்ள குறித்த நிலையத்தில் மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

எனினும் நிலையத்தில் எவரும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மர விற்பனை நிலையத்தினை நடத்தி வந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்டார்,இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் அமர்வில் வர்த்தக அமைச்சர்கள்

wpengine

மன்னாரில் காற்றாலை,மண் அகழ்வு அரச அதிகாரிகள்,அரசியல்வாதிகள் மௌனம்! பிரஜைகள் குழு விசனம்

wpengine

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்; நல்லடக்கம் ஞாயிற்றுக் கிழமை

wpengine