பிரதான செய்திகள்

வேட்புமனு நிராகரிப்பு! ஒருவர் மாரடைப்பால் மரணம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் காரணமாக மனமுடைந்து போன ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை ஹிரன கல்துடுவ பிரதேசத்தை சேர்ந்த ஏ.பெட்டிகிரி ஆராச்சிலாகே தோன் நிமல் அஜந்த விஜேசேகர என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்த போது ஊடகவியலாளர்கள் எனக் கூறி சிலர் உடலை படம்பிடிக்க முயற்சித்த போது, வைத்தியசாலையில் ஏனைய அதிகாரிகள் அதனை தடுத்ததால், அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு எதனையும் படம்பிடிக்கும் உரிமை இருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் அதற்கு மறுத்துள்ளனர். இதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

Related posts

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்மேளன பொதுக்கூட்டம்! மாவட்ட செயலகத்துடன் பேசி தீர்க்ககூடிய சுமூகமான நிலை தலைவர் தெரிவிப்பு

wpengine

எனது மாமா மாட்டிறைச்சி இறக்குமதி செய்யவில்லை! போலியான செய்தி நாமல்

wpengine

அபிவிருத்தி திட்டங்கள் இரண்டு மாதகாலத்தில் நிறைவு செய்ய வேண்டும் -அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine