பிரதான செய்திகள்

துமிந்தவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்த பந்துல

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹோமாகம தொகுதி அமைப்பாளர் பொறுப்புக்களிலிருந்து தாம்மை நீக்கியமை குறித்து பந்துல குணவர்தன முறைப்பாடு செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம தொகுதியின் அமைப்பாளராக பந்துல குணவர்தன கடமையாற்றி வருகின்றார். எனினும் இந்தப் பொறுப்புகளிலிருந்து தம்மை கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நீக்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

நீண்டகாலமாக ஹோமாக தொகுதி அமைப்பாளராக கடமையாற்றியுள்ளதாகவும் கட்சியின் மத்திய மற்றும் நிறைவேற்றுக் குழுக்களில் தொடர்ச்சியாக அங்கம் வகித்து கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் நிலையில் மாகாணசபை உறுப்பினா் காமினி திலகசிறிக்கு ஹோமாகம தொகுதியின் சில பொறுப்புக்களை வழங்கியமை தம்மை உதாசீனம் செய்வதற்கு நிகரானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்து கவனம் செலுத்தி கட்சியின் பொதுச் செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பந்துல குணவர்தன, ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

Related posts

மட்டக்களப்பு விவசாயியிடம் இலஞ்சம் பெற்ற கமநல உத்தியோகத்தர் கைது.!

Maash

ஊரடங்கு உத்தரவு தளர்வு முல்லைத்தீவில் அலைமோதிய மக்கள் கூடடம்

wpengine

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் முயற்சியால் ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை

wpengine