பிரதான செய்திகள்

இனவாதியான விக்னேஸ்வரன்,விமல் இருவரையும் கடலில் போட வேண்டும்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச போன்ற இனவாதிகளை கட்டி கடலில் போட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“புதிய அரசியல் அமைப்புக்கு இன்று தென்னிலங்கை சிங்கள மக்கள் ஆதரவு வெளியிட்டுள்ளனர். எனினும் இனவாதிகளின் கருத்துகளினால் புதிய அரசியல் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதிகார பகிர்வு, பௌத்த மத்திற்கான முன்னுரிமை வழங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக சீ.வி.விக்னேஸ்வரன், விமல் வீரவங்ச போன்ற இனவாதிகள் முடங்கிப்போயுள்ளனர். இந்நிலையில், சீ.வி.விக்னேஸ்வரன், விமல் வீரவங்ச போன்ற இனவாதிகளை கட்டி கடலில் போடவேண்டும்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் இனவாதிகளுக்கு நாடாளுமன்றில் வைத்து தக்கப் பதில் கொடுக்கப்பட்டிருந்ததாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அடுத்த வாரம் 250 ஏக்கர் காணி விடுவிப்பு! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்!

Editor

11 ஆண்டுகளாக ராஜபக்ஷக்களுக்கு தான் கடைக்கு சென்றோம் -மேல்மாகாண முதலமைச்சர்

wpengine