குறிப்பாக கொள்வனவு செய்வதற்கு இலகுவாகவும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்,ஊழியர்களுக்கு
குளிர்சாதன பெட்டிகள்,விவசாய உபகரணங்கள்,தண்ணீர் தாங்கிகள்,தண்ணீர் இறைக்கும் இயந்திரம் என வாழ்வாதர திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றது.
வாழ்வாதார உதவி தொகைக்கு ஏற்ப பெறுமதியான பொருற்கள் கூட மக்களுக்கு சென்றடைவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
பிரதேச செயலகத்தில் இருந்து உபகரணங்களை கொள்வனவு செய்யும் உரிய அதிகாரிகள் நேரடியாக வியாபார நிலையத்தில் வேலை செய்யும் உழியர்களை பிரதேச செயலகத்திற்கு அழைத்து வந்து பல மணி நேரம் ஒப்பந்த பேச்சுவார்தைகளை மேற்கொள்வதாகவும் அறியமுடிகின்றது.
இது போன்று கடந்த வருடம் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் வாழ்வாத திட்டம் வழங்கிய போது பல லச்சம் ரூபா ஊழல்,மோசடி இடம்பெற்றது.அதில் முன்னால் பிரதேச செயலாளர்,தற்போதைய கணக்காளர்,சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


