பிரதான செய்திகள்

மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு மன்னாரில்

ஈழப்போரின் போது வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் மன்னார் ஆண்டாங்குளத்தில் நேற்றைய தினம் நினைவு கூறப்பட்டது.

ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயக போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணி தலைவர் சி.வேந்தன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுடர் ஏற்றப்பட்டு முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தப்பிரதேசத்தில் உள்ள போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சியினரினால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போக்குவரத்து விதிகளை மீறிய 12,246 வாகனங்கள் பறிமுதல். இதில் போலி இலக்க தகடுகளுடன் 2,267 சொகுசு வாகனங்கள்..!

Maash

மூன்று நாள் விஷேட ரமழான் சன்மார்க்க கருத்தரங்கு மற்றும் சொற்பொழிவு- டோஹா கட்டாரில்

wpengine

கட்டார் நாட்டுக்கு உதவ முன் வந்துள்ள கிழக்கிலங்கை வர்த்தக ஏற்றுமதி அபிவிருத்தி சபை

wpengine