பிரதான செய்திகள்

முல்லைத்தீவு வைத்தியசாலையில் மக்கள் அவதி

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்ற வெளிநோயாளர்கள் வைத்தியம் பெறுவதில் அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வைத்தியரை சந்திக்கும் (கிளினிக்) வெளிநோயாளர்களே இவ்வாறு அவதியுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையிக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவையே வைத்தியர்கள் சென்று பார்வையிடுகின்றதாக நோயாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, தமது நோய் குணமடைய வைத்தியரை சந்திப்பதில் நெருக்கடியான நிலை ஏற்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறான சூழ்நிலை காரணமாக குறித்த வைத்தியசாலைக்கு இன்று சென்ற பல வெளிநோயாளர்கள் வைத்தியம் பெறமுடியாமல் திரும்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் -டிலாந்த விதானகே

wpengine

அமைச்சர் சமலின் திணைக்களத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி

wpengine

பயங்கரவாரத்திற்கு ஆதரவு டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

wpengine