பிரதான செய்திகள்

காதல் விவகாரம்! 20வயது பெண் தற்கொலை

அரநாயக்க , தேபத்தகம பிரதேசத்தில் யுவதியொருவர் நேற்று (8) மாலை தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேபத்தகம நகரைச் சேர்ந்த 20 வயதான குறித்த யுவதி வீட்டுக்கு பின்புறத்தில் வைத்து உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ள அந்த யுவதி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (9) மாவனெல்ல மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.

Related posts

எம்.எச்.முஹம்மத் மறைவுக்கு மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் பழைய மாணவர் சங்கத்தின் அனுதாபச் செய்தி

wpengine

அரசாங்கத்தையோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தையோ இனியும் நம்ப முடியாது.

wpengine

ஒருவரினுடைய தவரினாலே பல நபர்களுக்கு தொற்றக் கூடிய ஒரு வியாதி.

wpengine