பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஆசையா? விண்ணப்பிக்கலாம்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்களிடம் விண்ணப்பங்களை கோர அந்த கட்சி தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் இதற்கு அமைய வேட்பாளர்களை தெரிவு செய்ய உள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் விண்ணப்பதாரிகள் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்திற்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் அனைத்தும் பல கட்சிகளுடன் இணைந்து விரிவான கூட்டணியாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

Related posts

நெஞ்சை நிமிர்த்தி நின்று முகம் கொடுத்து வரும் மு.கா. தலைவர் ஹக்கீம்!

wpengine

மன்னார் பிரதேச சபை ஒரு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

wpengine

யாழ். அரியாலை காந்தி விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் காந்தி பிறீமியர் லீக் -04 கிறிக்கெட் போட்டி

wpengine