பிரதான செய்திகள்

அமைச்சர் ஜோன் அமரதுங்க கைது செய்யப்பட வேண்டும்: சிங்ஹல ராவய

மாபோல வத்தளையில் நடைபாதை ஒன்று அகற்றப்பட்டமை தொடர்பில் சிங்ஹல ராவய           (30-03-2016) ஆம் திகதி  பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை செய்துள்ளது.

இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவை கைது செய்ய வேண்டும் என்று அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

பொது உடமையான நடைபாதையை அகற்றிய குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்ய வேண்டும் என்று சிங்ஹல ராவயவின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் கோரியுள்ளார்.

நாட்டின் சட்டத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவர் என்று ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எச்சரித்துள்ளார்.

எனவே அந்த அடிப்படையில் அமைச்சர் ஜோன் அமரதுங்க கைது செய்யப்பட வேண்டும் என்று சுதத்த தேரர் கோரியுள்ளார்.

Related posts

வன்னி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

wpengine

இலங்கையர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த நடவடிக்கை! -பிரதமர்-

Editor

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக

wpengine