பிரதான செய்திகள்

தாஜுதீன் கொலை! ஆனந்த சமரசேகரவை கைதுசெய்ய உத்தரவு

றக்பி வீரர் வசிம் தாஜூதீன் கொலை வழக்கில் சிரேஸ்ட சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யும் உத்தரவை சீ.ஐ.டி தரப்பினர் கோரியுள்ளனர்.

தாஜூதீனின் கொலை தொடர்பில் பிரேத பரிசோதனையை நடத்திய ஆனந்த சமரசேகர, அது தொடர்பான சாட்சியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொலை வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யும் உத்தரவை நேற்று சீ.ஐ.டி நீதிமன்றில் கோரியது
இதனை கவனத்தில் கொண்ட கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிவான், ஆனந்த சமரசேகரவினால் தமது கைதுக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அதனையும் கருத்திற்கொண்டு உரிய உத்தரவை வழங்குவதாக அறிவித்தார்.

Related posts

கல்வி நிருவாக சேவைக்கு 306 பேர் தெரிவு! தமிழர் 90, முஸ்லிம்கள்-29

wpengine

பாதயாத்திரையிலீடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல்

wpengine

Colombo D.S. Senayake College celeberated Internationl Mother Language Day – chief guest state minster education Ratha krishnan

wpengine