பிரதான செய்திகள்

வவுனியா கல்லூரியில் வாணிவிழா

வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் வாணி விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரி அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றள்ளது.

 

இந்து மாமன்றப் பொறுப்பாசிரியர் பிரம்மஸ்ரீ எஸ். சுந்தரசர்மா மற்றும் செயலாளர் வாஹினி நாகரட்ணம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவ மாணவிகளின் பல்வேறு வகையான இயல், இசை, நாடக நிகழ்வுகளும் விருந்தினர்களின் உரைகளும் நடைபெற்றுள்ளது.


நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டுள்ளார். இந்து மாமன்றத்தினர் ஏற்பாட்டில் ‘நவராத்திரியும் மாணவ மாண்பும்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றியுள்ளார்.
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டால் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் அமைச்சர் றிஷாட்டிற்கு நன்றி தெரிவிப்பு

wpengine

வன்னி மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான விஷேட கலந்துரையாடல்

wpengine

மன்னார் நகர பிரதேச செயலகத்தில் சமுர்த்தி போட்டி (படம்)

wpengine