பிரதான செய்திகள்

மஹிந்தவுடன் பேச உள்ள மூன்று அமைச்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினரை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று அமைச்சர்களை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இதற்காக ஜோன் செனவிரட்ன, அனுரபிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே ஜனாதிபதி நியமித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில், மகிந்த அணியினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

பனை அபிவிருத்தி சபையில் நிதி மோசடி! ஜனாதிபதி கரிசனை செலுத்த வேண்டும்.

wpengine

பட்டதாரிகள் 57,000 பேரையும் ஒரே தடவையில் இணைத்து கொள்ள வேண்டும்

wpengine