பிரதான செய்திகள்

ஹக்கீமுக்கு கடவுளாகிய மைத்திரி.

(மிஸ்பாக்)

இவர் ஒரு முஸ்லிம் கட்சித் தலைவராக இருக்க சிறிதும் தகுதியில்லை.

நான் ஒரு பேரின மரண வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் என்னை கை கூப்பி கும்பிட்டு அழைத்தார். நான் மாறி கும்பிடவில்லை. மறு நாள் காலையில் என்னை சந்தித்த அவர் , நான் அவருக்கு பதிலுக்கு கை கூப்பி கும்பிடவில்லை என்பதை அனைவருக்கும் மத்தியில் கூறினார். நான் கும்பிடாததை தவறாக நினைத்துள்ளார் என்பதை புரிந்த நான் உடனே

” முஸ்லிம்கள் அவ்வாறு செய்ய முடியாது என்றேன். ”

உடனே அவர்

” முஸ்லிம்கள் கும்பிடுவது தானே என்றார். ”

இல்லை என்று விளங்கப்படுத்தினேன். அவரும் ஏற்றுக்கொண்டார்.

இதனை பார்க்கின்ற ஒரு மாற்று மதத்தவர் முஸ்லிம்கள் கும்பிடலாம் என நினைத்துகொள்ள வாய்ப்புள்ளது.

ஹக்கீம் போன்றவர்களின் இவ்வாறான தவறான முன்மாதிரிகள் தான் எம்மை சாபங்களாய் தொடர்கின்றன.

இதனையும் சாணக்கியம் என்பவன் தான் மு.காவின் போராளி.?

Related posts

வன்னிக்கு தேசியப்பட்டியலா?

wpengine

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்துதான் பாதாள உலகம் இயங்கியது.

Maash

நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது-ரணில்

wpengine