பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக மன்னாரில் சாத்விகப் போராட்டம்

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டு அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 5ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை வண்மையாக கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அந்த மக்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு அழுத்தத்தினை கொடுக்கும் வகையில் நாளை மறுதினம் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே, குறித்த ஜனநாயக போராட்டத்தில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியல், இயக்கம்,கருத்து முரண்பாடுகளை மறந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine

அத்தியாவசிய உலர் உணவுக்காக மாதாந்த சம்பளம் ஒதுக்கீடு

wpengine

கட்டுக்கரை குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்

wpengine