பிரதான செய்திகள்

வவுனியாவில் இன்னும் திறந்து வைக்கப்படாத தாய்,சேய் நிலையம்

வவுனியா – பட்டாணிச்சி, புளியங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் கடந்த மூன்று வருடங்களாக கட்டப்பட்டு வந்த தாய், சேய் பராமரிப்பு நிலையம் இன்று வரை திறந்து வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கிராம சேவையாளர் காரியாலயத்தில இயங்கி வரும் தாய், சேய் பராமரிப்பு நிலையத்தினை மாற்றுவதற்காகவே புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு வந்தது.

எனினும் 10 லட்சம் ரூபா செலவில் கட்டிமுடிக்கப்பட்ட குறித்த புதிய கட்டிடம் இதுவரையிலும் திறந்து வைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மின்கல பாவனையாளர்கள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து இணைப்புகளை துண்டிக்கும்படி கோரிக்கை .

Maash

இனவாதிகளின் இலக்காக இருந்த டொக்டர் ஷாபி சஹாப்தீன்! ஏன் கைது செய்யப்பட்டார்.

wpengine

உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப்பின் மணி விழா

wpengine