பிரதான செய்திகள்

மீள்குடியேற்ற செயலணி ஊடாக இடம்பெயர்ந்தோர்,பாதிக்கப்பட்டோர் தகவல் திரட்டல்

மீள்குடியேற்ற செயலணி ஊடாக நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் முகமாக தகவல் திரட்டும் விண்ணப்ப படிவத்தை மீள்குடியேற்ற செயலணி வெளியீட்டு உள்ளது.

குறிப்பாக மோதல் காரணமாக 1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு நிண்டகாலமாக உள்ளக இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகை கணிப்பில் பங்குபற்றுவோர் தொடர்பாக பதிவு செய்யப்பட உள்ளது.

எனவே நிங்களும் இடம்பெயர்ந்தோர் என்றால் கீழ் உள்ள விண்ணப்படிவங்களை பூர்த்தி உரிய முறையில் பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் M.N.முஜிபு றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

ரிஷாட் பதியுதீனின் விடயத்தில் அரசு நீதியாக நடந்துகொள்ள வேண்டும்

wpengine

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 10000 ரூபா கொடுப்பனவு வழங்க யார் காரணம்

wpengine

மன்னார் காற்றாலை திட்டத்தை திறந்து வைத்த மஹிந்த

wpengine