பிரதான செய்திகள்

சாரதி அனுமதியில் உடல் உறுப்பு தானம்

சாரதி அனுமதிப்பத்திரத்தில் உடல் உறுப்புக்களை தானம் செய்வது குறித்த நிபந்தனை உள்ளடக்கப்படவுள்ளது.

விபத்து ஒன்றில் உயிரிழக்கும் நபர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்யும் வகையிலான நிபந்தனையொன்று சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.

சுவாசப்பை, இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பாகங்களை தானமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் உடல் உறுப்புக்களைக் கொண்டு உடல் உறுப்புக்கள் தேவைப்படும் நபர்களுக்கு அதனைப் பொருத்தி, புதிய வாழ்க்கை அளிக்கப்பட முடியும் என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Related posts

மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

wpengine

வறுமையை மட்டுப்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டம்

wpengine

நுண்நிதி கடனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Editor