பிரதான செய்திகள்

மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பேஸ்புக் தடை ஜனாதிபதி

பேஸ்புக் உட்பட சில சமூக வலைத்தளங்கள் பல விடயங்களுக்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பேஸ்புக் போன்றவைகள் தடையாக உள்ளதென ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மின்சார சபை ஊழியர்களின் எதிர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசாங்க மின்சார சபை ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கீழ் வகுப்பு ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால் அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் சைட்டம் எதிர்ப்பினை கடந்த அரசாங்கமே உருவாக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

5,000 மதத் தலங்களில் சூரிய மின் தகடுகள் ..!

Maash

இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த தவறினால் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏட்படும்.

Maash

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் எமது கட்சியில் இல்லை நாம் தூய்மையான அரசியலே செய்கின்றோம்!-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor