பிரதான செய்திகள்

மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ள நவமணிப் பத்திரிக்கை

இலங்கை முஸ்லிம்களின் ஊடகத் தேவையை தன்னால் முடிந்தளவு நிறைவேற்றி வரும் நவமணிப் பத்திரிகை, பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அறியவருகிறது.

மிகப்பெரும் சவால்களுடன் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் மற்றும் ஆசிரியர் பீடம் நமமணிப் பத்திரிகையை வெளிக்கொணர  தியாகங்களுக்கு  மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.

இது புனித ரமழான் காலம்.

முஸ்லிம் செல்வந்தர்கள் நவமணி பத்திரிகைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கவனத்திற்கொள்ள வேண்டும்.

நவமணி பத்திரிகை வீழ்வது என்பது, எமது முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் இழப்பாக கருதப்படும்.

இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களும் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்.

நவமணி பத்திரிகை தொடர்ந்து வெளிவரவும், இந்த சமூகத்திற்கு தொடர்ந்து ஊடகச் சேவையாற்றவும் தம்மால் முடிந்த ஒத்தழைப்புகளை நல்குவது ஒவ்வொரு முஸ்லிம் மீது கடமையாகும்.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு
பிரதம ஆசிரியர் – 0772612288

Related posts

சிவசக்தி ஆனந்தனின் செயலாளரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை.

wpengine

பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம் சமூகத்தின் வாக்களிப்பும்

wpengine

வவுனியாவில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள

wpengine