பிரதான செய்திகள்

வசீம் தாஜூடினின் வழக்கு வௌியேறினார் அனுர

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து இன்று நீதிமன்றத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

அனுரவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து, இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, இன்று பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

மரணமடைந்த றகர் வீரர் வசீம் தாஜூடினின் வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அனுர சேனாநாயக்க, நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவின் முக்கியமான விகாரைக்கு சென்ற மஹிந்த

wpengine

அமைச்சரவை மாற்றம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை

wpengine

மன்னார் – எருக்கலம்பிட்டியில் போதைப்பொருள் ஒழிப்பு புனர்வாழ்வு பெற்ற இருவர்

wpengine